search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூளகிரி பகுதியில் மதுவிற்றவர் சொகுசு காருடன் கைது
    X

    சூளகிரி பகுதியில் மதுவிற்றவர் சொகுசு காருடன் கைது

    சூளகிரி பகுதியில் அரசு மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகமாக வாங்கி கூடுதல் விலைக்கு மதுவிற்றவர் சொகுசு காருடன் கைது செய்யப்பட்டார்.
    வேப்பனஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பீளாலம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது40). இவர் அடிக்கடி அரசு மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதனை அதிக விலைக்கு விற்று வந்தார். 

    இது குறித்து ரகசிய தகவல் அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று மாலை பேரிகை சாலையில் கோவிந்தன் மறைவான இடத்தில் மது விற்றதை கண்டுபிடித்து அவரை கையும், களவுமாக பிடித்தார்.

    போலீசார் கோவிந்தனிடமிருந்து சொகுசு கார் மற்றும் ரூ. 6,000 மதிப்புள்ள 57 மது பாட்டிகள்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×