search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூரில் கத்தியால் வாலிபர் காது அறுப்பு- 2 தொழிலாளிகள் கைது
    X

    ஆத்தூரில் கத்தியால் வாலிபர் காது அறுப்பு- 2 தொழிலாளிகள் கைது

    ஆத்தூரில் முன்விரோத தகராறில் வாலிபரின் காதை அறுத்த 2 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பூவண் மகன் மாரியப்பன் (வயது 28). கூலித்தொழிலாளி.

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வண்ணமுத்து (35). என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாரியப்பன் முக்காணி மெயின் பஜார் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வண்ணமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் வழிமறித்து மாரியப்பனை தாக்கினர். பின்னர் கத்தியால் குத்தி அவரது காதை அறுத்தனர்.

    இதில் படுகாயமடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசில் வழக்குபதிவு செய்து கூலித்தொழிலாளிகளான வண்ணமுத்து, சின்னதம்பி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×