search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- விஜயகாந்த்
    X

    பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- விஜயகாந்த்

    பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #vijayakanth #dharmapurigirlstudent #girlmolested
    சென்னை:

    தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச்சேர்ந்த சதீஷ் (வயது22), ரமேஷ் (22) ஆகியோரை தேடி வந்தனர்.

    இவர்களில் ஏற்காட்டில் பதுங்கி இருந்த சதீஷை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.

    இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தருமபுரி மாவட்டம், சிட்லிங் மலைக்கிராமத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களால், பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், கடந்த வாரம் சேலம் மாவட்டத்திலும் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்படிருப்பதையும் தே.மு.தி.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனையை வழங்கினால்தான், இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். #vijayakanth  #dharmapurigirlstudent #girlmolested
    Next Story
    ×