search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே குழந்தையை தவிக்க விட்டு தாய் மாயம்
    X

    தேனி அருகே குழந்தையை தவிக்க விட்டு தாய் மாயம்

    தேனி அருகே குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் ராமசாமி நாயக்கன்பட்டி ரேசன் கடை தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரித்திகா (வயது 22). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்று விட்டார்.

    தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்ற பிரித்திகா மகனை அங்கு விட்டு விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு தரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர்.

    எங்கும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×