என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வைகோ மீது முக ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார்- தம்பிதுரை
Byமாலை மலர்12 Nov 2018 4:32 AM GMT (Updated: 12 Nov 2018 4:32 AM GMT)
தி.மு.க. தோல்விக்கு காரணமான வைகோ மீது மு.க.ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #thambidurai #Vaiko #MKStalin
கரூர்:
கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சர்வ சிக்ச அபியான் என்று சொன்னால் யாருக்கு புரிகிறது. தமிழகத்தில் தமிழ் மொழியில் திட்டங்களை அறிவியுங்கள். காங்கிரசாக இருக்கட்டும், பா.ஜ.க.வாக இருக்கட்டும், இந்தியை புகுத்தி நம்மை அடிமையாக வைக்க பார்க்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. யார் ஆட்சியில் தமிழகத்திற்கு நன்மை கிடைத்தது.
தி.மு.க.வும்-காங்கிரசும் 15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். ஏதாவது தமிழகத்திற்கு நன்மை கிடைத்ததா? இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது கூட மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இருந்து தி.மு.க. விலகவில்லை. இப்போது தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
பாராளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் முயற்சி பலிக்கும் என சொல்லும் இதே வைகோ, கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற தேர்தல் உடன்பாடு செய்தார். இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான காங்கிரஸ் ஒழிய வேண்டும் என கடுமையாக சாடினார். மோடி வெற்றி பெறுவதற்கு வைகோவும் காரணம் அல்லவா? இதை மறுக்க முடியுமா?
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்பதற்கும் வைகோ காரணம்தானே. 3-வது அணி அமைத்ததால் ஓட்டு பிரிந்து வெற்றி வாய்ப்பு பறிபோனதாக தி.மு.க.வினரே குற்றம் சாட்டினார்கள்.
இதனால் இப்போதும் வைகோ மீது மு.க.ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார். ஆனால் வெளியே காண்பிக்கவில்லை. நிச்சயம் அதையெல்லாம் காண்பிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #thambidurai #Vaiko #MKStalin
கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சர்வ சிக்ச அபியான் என்று சொன்னால் யாருக்கு புரிகிறது. தமிழகத்தில் தமிழ் மொழியில் திட்டங்களை அறிவியுங்கள். காங்கிரசாக இருக்கட்டும், பா.ஜ.க.வாக இருக்கட்டும், இந்தியை புகுத்தி நம்மை அடிமையாக வைக்க பார்க்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. யார் ஆட்சியில் தமிழகத்திற்கு நன்மை கிடைத்தது.
தி.மு.க.வும்-காங்கிரசும் 15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். ஏதாவது தமிழகத்திற்கு நன்மை கிடைத்ததா? இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது கூட மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இருந்து தி.மு.க. விலகவில்லை. இப்போது தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அந்த தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். ஒத்தக் கருத்துடையவர்களுடன்தான் தேர்தல் உடன்பாடு. எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டு வருபவர்களுடன் அ.தி.மு.க. தலைமை கூட்டணி அமைக்கும். சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு ஒரு நாடகம். இருவரும் தங்கள் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள். நாளை மோடியுடன் கூட ஸ்டாலின் பேசுவார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்பதற்கும் வைகோ காரணம்தானே. 3-வது அணி அமைத்ததால் ஓட்டு பிரிந்து வெற்றி வாய்ப்பு பறிபோனதாக தி.மு.க.வினரே குற்றம் சாட்டினார்கள்.
இதனால் இப்போதும் வைகோ மீது மு.க.ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார். ஆனால் வெளியே காண்பிக்கவில்லை. நிச்சயம் அதையெல்லாம் காண்பிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #thambidurai #Vaiko #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X