search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்- ஆட்டோ டிரைவர் கைது
    X

    கன்னியாகுமரியில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்- ஆட்டோ டிரைவர் கைது

    கன்னியாகுமரியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போக்குவரத்து பிரிவு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அன்பழகன். (வயது 55). இவர் நேற்று கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த ஜாண் (39) என்பவர் ஆட்டோவில் கடற்கரை சாலை வழியாக செல்ல முயன்றார். 

    இதனை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தடுத்து நிறுத்தி அந்த வழியாக செல்ல கூடாது என கூறினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஜாண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 

    இதுகுறித்து அன்பழகன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஆட்டோ டிரைவர் ஜாணை போலீசார் கைது செய்தனர். 
    Next Story
    ×