search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை அருகே கார் மோதி விவசாயி பலி- டிரைவர் கைது
    X

    விராலிமலை அருகே கார் மோதி விவசாயி பலி- டிரைவர் கைது

    விராலிமலை அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    விராலிமலை அருகேயுள்ள தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 67). விவசாயி இவர் சம்பவதன்று திருச்சி -மதுரை நான்கு வழிச்சாலை  விராலிமலை கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு அருகே தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கிசென்ற கார் கருப்பையா மீது மோதியது. இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.
     
    இது குறித்து தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் விரைந்து சென்று கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து கார் டிரைவர் மதுரையைச் சேர்ந்தராஜ் பிரபுவை(24) கைது செய்தனர்.
    Next Story
    ×