search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணியில் அதிகாரிகள் டார்ச்சரால் போலீஸ்காரர் தற்கொலை?
    X

    வேளாங்கண்ணியில் அதிகாரிகள் டார்ச்சரால் போலீஸ்காரர் தற்கொலை?

    வேளாங்கண்ணியில் உள்ள லாட்ஜியில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். அதிகாரிகள் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் விவேக்(வயது 25). இவர் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் விவேக் தங்கி இருந்தார். நீண்ட நேரமாக அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் இருந்த மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு விவேக் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதையடுத்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட விவேக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 1½ மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு விவேக், வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் விவேக் கடைக்கு சென்று புதிய புடவை ஒன்று வாங்கி அதில்அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விவேக் அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? காதல் விவகாரமா? அல்லது குடும்ப பிரச்சினையா? என்று வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×