என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘கஜா புயல்’ - தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட்
Byமாலை மலர்11 Nov 2018 5:54 AM GMT (Updated: 11 Nov 2018 6:07 AM GMT)
‘கஜா புயல்’ காரணமாக இந்திய வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் விடுத்துள்ளது. #Gaja #Storm #ChennaiRain #RedAlert
சென்னை:
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது இலங்கை சூட்டிய பெயர் ஆகும்.
இந்த புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் சென்னையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக கடலில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவே, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக இந்திய வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
சென்னை மற்றும் வட தமிழகத்தில் 14-ந்தேதியில் இருந்து மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன் பிறகு உள்மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை நெருங்கும் வரை வடதமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. #Gaja #Storm #ChennaiRain #RedAlert
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது இலங்கை சூட்டிய பெயர் ஆகும்.
இந்த புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் சென்னையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முதலில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சென்னையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. 14-ந்தேதி சென்னையை நெருங்கும் புயல் தென்கிழக்கு திசையில் புதுச்சேரி நோக்கி நகரும் என்றும் 15-ந்தேதி காலை புதுவை அருகே கரையை கடக்கும் என்றும் தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கஜா புயல் காரணமாக கடலில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவே, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக இந்திய வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
சென்னை மற்றும் வட தமிழகத்தில் 14-ந்தேதியில் இருந்து மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன் பிறகு உள்மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை நெருங்கும் வரை வடதமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. #Gaja #Storm #ChennaiRain #RedAlert
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X