search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை, அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    புதுக்கோட்டை, அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    மத்திய பா.ஜ.க. அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 3-ம் ஆண்டு தொடக்கத்தை கருப்பு தினம் என்று அறிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில செய்தி தொடர்பாளர் பெனட் அந்தோணிராஜ், நகர தலைவர் இப்ராகிம்பாபு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அவர்கள், பண மதிப்பிழப்பு குறித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் அறந்தாங்கியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் தர்மதங்கவேல் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பராஜ், சுப்புராம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×