search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    நாகையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    நாகையில் பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சந்தானமாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் துணை தலைவர் பன்னீர், வட்டார தலைவர்கள் சுப்பிர மணியன், செய்யதுபிக்கின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாகூர் நகர தலைவர் அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×