search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    திருப்பத்தூர் அருகே சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    திருப்பத்தூர் அருகே சாராயம் விற்பனை செய்து வந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28), கோதணடராமன் (22) இவர்கள் அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பாக திருப்பத்தூர் கலால் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி 2 பேரையும் கைது செய்தார்.

    தொடர்ந்த சாராய விற்பனை செய்த 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார்.

    அதனை ஏற்ற கலெக்டர் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×