search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமத்திவேலூரில் கூரை வீடு எரிந்து நாசம்
    X

    பரமத்திவேலூரில் கூரை வீடு எரிந்து நாசம்

    பரமத்திவேலூரில் கூரை வீடு தீயில் எரிந்து நாசமானதில் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே சிறுகிணற்றுபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் கூரை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

    இந்நிலையில் திடீரென்று அந்த கூரை வீடு தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். 
    Next Story
    ×