search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி கணக்கில் பணம் குறைந்ததால் தந்தைக்கு பயந்து மாணவர் தற்கொலை
    X

    வங்கி கணக்கில் பணம் குறைந்ததால் தந்தைக்கு பயந்து மாணவர் தற்கொலை

    வங்கி கணக்கில் ரூ. 10 ஆயிரம் பணம் குறைந்ததால் தந்தைக்கு பயந்து மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம், அரசவனங்காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் மகன் மணிகண்டன் (வயது 20). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் வல்லத்தில் தனி அறை எடுத்து நண்பர்களோடு தங்கி இருந்தார்.

    கனகராஜ் தனது மகன் வங்கி கணக்கில் தான் பணம்போட்டு எடுத்து வந்தார். மணிகண்டன் தான் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுப்பாராம்.

    இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் குறைந்துள்ளது. இதுபற்றி தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்ற பயத்தில் மணிகண்டன் அவரது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அவரது நண்பர்கள் வல்லம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×