search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் பிளஸ்-1 மாணவி தங்கையுடன் மாயம்
    X

    விருதுநகரில் பிளஸ்-1 மாணவி தங்கையுடன் மாயம்

    பிளஸ்-1 மாணவி தங்கையுடன் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் எம்.மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன்கள் சாலினி (வயது 17), மீனாட்சி (16).

    திருத்தங்கல்லில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலினி பிளஸ்-1 படித்து வருகிறார். அதே பள்ளியில் மீனாட்சி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக சகோதரிகள் இருவரும் வீட்டில் கூறிச் சென்றனர். அதன் பிறகு அவர்கள் மாலையில் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் 2 பேர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஆமத்தூர் போலீசில், சகோதரிகளின் தாயார் குருவத்தாய் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அக்காள்-தங் கையை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×