search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #DenguFever

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பிளைப்பாக்கம் ஊராட்சி பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (வயது 27). இவருக்கு கடந்த 4-ந் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த ஜோசப்(37) என்பவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பிள்ளைப் பாக்கத்தில் மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ முகாம் அமைத்து வீடு வீடாக சென்ற பரிசோதனை செய்து வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி உள்ளனவா என கண்டறிந்து அதை அழித்தல், ஊராட்சி முழுவதும் பிளிச்சிங் பவுடர் தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுத்தல், புகை மருந்து அடித்து கொசுவை அழித்தல், அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கி காய்ச்சலை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா சீனிவாசன் ஆகியோர் பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசு உற்பத்தி நிலைகண்டறிந்து 3 வீடுகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். #DenguFever

    Next Story
    ×