search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவல்லிக்கேணியில் நள்ளிரவில் ஏ.டி.எம். மையம் உடைப்பு
    X

    திருவல்லிக்கேணியில் நள்ளிரவில் ஏ.டி.எம். மையம் உடைப்பு

    திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ATM #ATMBroken
    சென்னை:

    திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் இயங்கி வரும் இந்த மையத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.

    எந்திரத்தை உடைத்து அதில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்து இருக்கலாம் என தெரிகிறது. கொள்ளையர்கள் நீண்ட நேரம் போராடி, முயற்சி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் கண்ணாடி கதவினை உடைத்து சென்றுள்ளனர்.

    இதுபற்றி திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஏ.டி.எம். மையத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் உள்ள கேமராவை வைத்து கொள்ளை கும்பலை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை முயற்சியில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள். அவர்களது முயற்சி தோல்வி அடைந்தற்கான காரணம் என்ன?

    பொதுமக்கள் யாரும் வந்ததால் முயற்சியை கைவிட்டு ஓடினார்களா? குடிபோதையில் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. #ATM #ATMBroken
    Next Story
    ×