என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்9 Nov 2018 4:22 PM GMT (Updated: 9 Nov 2018 4:22 PM GMT)
மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #congressdemonstratin
திண்டுக்கல்:
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனால் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் இன்னும் துன்பப்பட்டு வருவதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் நாகல்நகரில் மாநகர மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் அரபுமுகமது, சிவாஜி, ராஜாஜி, சீனிவாசன், காஜா மைதீன், அஜித், அப்துல் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த நாளை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். #congressdemonstratin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X