search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற உழைக்க வேண்டும்- கீதாஜீவன் பேச்சு
    X

    விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற உழைக்க வேண்டும்- கீதாஜீவன் பேச்சு

    விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற உழைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசினார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை, எப்போதும்வென்றான் மற்றும் பசுவந்தனை ஆகிய இடங்களில் ஒட்டப்பிடாரம் கிழக்கு தி.மு.க ஒன்றியம் சார்பில் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமை தாங் கினார்.

    இதில் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய ஊராட்சி கழக செயலாளர் கள், நிர்வாகிகள் ஒருங் கிணைந்து செயல்பட வேண் டும். இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வர இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளை இப் போதே  செயல்படுத்த வேண் டும்.
     இவ்வாறு எம்.எல்.ஏ பேசினார். 

    தொடர்ந்து தலைமை கழக பூத் கமிட்டி ஆய்வாளர் பூத் கமிட்டிகளை ஆய்வு செய் தனர். அப்போது தலைமை கழக பூத் கமிட்டி ஆய்வாளர் பல்லாவரம் எம்.எல்.ஏ கிரி, ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமூவேல், ஒன்றிய அவைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜ், ரவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×