search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    அரியலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    அரியலூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    அரியலூர்:

    அரியலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 10.11.2018 (சனிகிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மேற்படி துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினா புரம், குறிச்சி நத்தம், புதுப் பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், இரசுலா பாத், பாளம்பாடி, பார்ப் பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி இராஜீவ்நகர் மற்றும் கொளப்பாடி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன் குடிக்காடு, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், ஒட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    மேலும், பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறைவுற்றால் உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அரியலூர் உதவி செயற்பொறியாளர் பி.சாமிதுரை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×