search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    தக்கலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    தக்கலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்றார். #congress #centralgovernment #demonetisation

    தக்கலை:

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ஓராண்டு நிறைவடைந்து உள்ளதை கருப்பு தினமாக கருதியும், கருப்பு பணத்தை மீட்டு எடுப்போம் என்று மத்திய அரசு அறிவித்து இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தக்கலை வட்டாரத்தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் தம்பி விஜயகுமார், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஏசுராஜா, மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ஜாண் இக்னேசியஸ், சேம் செல்வக்குமார் உள்பட திரளான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மேலும் தக்கலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #congress #centralgovernment #demonetisation 

    Next Story
    ×