search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 30 பவுன் நகையுடன் மாயம்
    X

    மன்னார்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 30 பவுன் நகையுடன் மாயம்

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 30 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் மன்னார்குடி பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஒவல்குடியை சேர்ந்த சிற்றரசு என்பவரின் மகள் ரசிகா (வயது 23). பி.ஏ.பட்டதாரி. இவருக்கும் திருமக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரசிகா வெளிநாடு செல்வதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு திடீரென மாயமாகி விட்டார். அவர் தனது பாஸ்போர்ட் மற்றும் 30 பவுன் நகை ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றையும் எடுத்து சென்று விட்டார்.

    அவரை பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்றரசு வடுவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசிகா திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமாக என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மன்னார்குடி பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×