search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகூர் அருகே சரக்கு வேன் மோதி பொறிவியாபாரி பலி
    X

    நாகூர் அருகே சரக்கு வேன் மோதி பொறிவியாபாரி பலி

    நாகூர் அருகே சரக்கு வேன் மோதி பொறிவியாபாரி பரிதாபமாக இறந்தார். இதில் வியாபாரியின் மகன், மகள் படுகாயம் அடைந்தனர்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அய்யனார் கோவில் பண்டக சாலை தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது50). பொறிவியாபாரி. இவரது மகன் சந்தோஷ்(12), மகள் நந்தினி(17). இந்தநிலையில் நேற்று காலை வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக உதயகுமார் தனது மகன், மகளுடன் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உதயகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ், நந்தினி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மேலும் இறந்த உதயகுமார் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரக்கு வேன் டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர். 
    Next Story
    ×