என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளை- கதவை உடைத்து துணிகரம்
Byமாலை மலர்8 Nov 2018 11:51 AM GMT (Updated: 8 Nov 2018 11:51 AM GMT)
விருதுநகரில் ஆசிரியர் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 9 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வ.உ.சி. தெருவில் வசிப்பவர் ராஜ்குமார் (வயது 42). இவர், இடையநேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக உள்ளார்.
இவர், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தேனிக்கு கடந்த 4-ந் தேதி சென்றார். இதனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.
நேற்று இரவு ராஜ்குமார் குடும்பத்தினர் வீடு திரும்பினர். அப்போது பீரோ திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.
வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்குள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்தது. எனவே வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம மனிதர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து சூலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.1,700 கொள்ளை போயிருப்பதாக ராஜ்குமார் தெரிவித்தார். வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வ.உ.சி. தெருவில் வசிப்பவர் ராஜ்குமார் (வயது 42). இவர், இடையநேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக உள்ளார்.
இவர், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தேனிக்கு கடந்த 4-ந் தேதி சென்றார். இதனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.
நேற்று இரவு ராஜ்குமார் குடும்பத்தினர் வீடு திரும்பினர். அப்போது பீரோ திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.
வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்குள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்தது. எனவே வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம மனிதர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து சூலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.1,700 கொள்ளை போயிருப்பதாக ராஜ்குமார் தெரிவித்தார். வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X