search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கயத்தில் டீ குடிக்க சென்ற வியாபாரி கார் மோதி பலி
    X

    காங்கயத்தில் டீ குடிக்க சென்ற வியாபாரி கார் மோதி பலி

    காங்கயம் அருகே டீ குடிக்க சென்ற வியாபாரி கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காங்கயம்:

    காங்கயம்- கோவை ரோடு பொங்கலூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனி (வயது 46). மாடு வியாபாரி. நேற்று அதிகாலை எழுந்த பழனி டீ குடிக்க பேக்கரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    நாச்சிபாளையம் பிரிவு சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×