search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2190 பேரிடமும் அபராதம் வசூலிக்க முடிவு
    X

    கோர்ட்டு கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2190 பேரிடமும் அபராதம் வசூலிக்க முடிவு

    தீபாவளிக்கு சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2190 பேரிடம் அபராதம் வசூலிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பொதுமக்கள் இதனை கண்டு கொள்ளாமல் விரும்பிய நேரங்களில் எல்லாம் பட்டாசு வெடித்தனர்.

    இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 2190 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் கண்டிப்பாக கோர்ட்டில் அபராதம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். விதிமுறைகளை மீறிய அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதன்படி பட்டாசு வழக்கில் சிக்கிய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக ஏற்கனவே 343 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மேலும் 15 பேர் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக போலீசில் சிக்கியுள்ளனர். #tamilnews
    Next Story
    ×