என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர் அருகே மூதாட்டியை கொன்ற தொழிலாளி கைது
Byமாலை மலர்8 Nov 2018 10:36 AM GMT (Updated: 8 Nov 2018 10:36 AM GMT)
ஆம்பூர் அருகே மூதாட்டியை கொன்ற தொழிலாளியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 60). இவர் கடந்த 4-ந் தேதி இரவு வழக்கம் போல தேவலாபுரம் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மணியம்மாள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மறுநாள் இதனை பார்த்த பொதுமக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டுறவு சங்க கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குணசேகரன் (வயது 32) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. குணசேகரனுக்கு உறவினர்கள் யாரும் கிடையாது. அவரும், அதே ரேஷன் கடையில் தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று அங்கு தூங்கும்போது மணியம்மாளுக்கும், குணசேகரனுக்கும் தகராறு ஏற்பட்டு, அப்போது ஆத்திரத்தில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து குணசேகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 60). இவர் கடந்த 4-ந் தேதி இரவு வழக்கம் போல தேவலாபுரம் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மணியம்மாள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மறுநாள் இதனை பார்த்த பொதுமக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டுறவு சங்க கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குணசேகரன் (வயது 32) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. குணசேகரனுக்கு உறவினர்கள் யாரும் கிடையாது. அவரும், அதே ரேஷன் கடையில் தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று அங்கு தூங்கும்போது மணியம்மாளுக்கும், குணசேகரனுக்கும் தகராறு ஏற்பட்டு, அப்போது ஆத்திரத்தில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து குணசேகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X