search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர்- திருவண்ணாமலையில் தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு
    X

    வேலூர்- திருவண்ணாமலையில் தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் கோர்ட்டு தீர்ப்பை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    வேலூர் மாநகர பகுதியில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்த 14 பேர் மீதும், காட்பாடி-4, ராணிப்பேட்டை-6, அரக்கோணம்-2, குடியாத்தம்-4, ஆம்பூர்-6, வாணியம்பாடி-7, திருப்பத்தூர் 7 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத நேரத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்தததாக 93 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #tamilnews
    Next Story
    ×