search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த உதவியாளர், இரு மகன்கள் கார் விபத்தில் பலி
    X

    அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த உதவியாளர், இரு மகன்கள் கார் விபத்தில் பலி

    தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த உதவியாளரும் அவரது இரு மகன்களும் கள்ளக்குறிச்சி அருகே இன்று நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர். #Minister #Jayakumar #EdappadiPalanisamy
    கடலூர்:

    தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் லோகநாதன். இவரது இரு மகன்களான நிர்மல் குமார், சிவராமன் ஆகியோருடன் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

    கடலூர் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே உள்ள வேப்பூர் பகுதியை நெருங்கி போது எதிரே வந்த பஸ் கார் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #Minister #Jayakumar #EdappadiPalanisamy
    Next Story
    ×