search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏற்காட்டில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
    X

    ஏற்காட்டில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

    ஏற்காட்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்ணுக்கு வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு வெள்ளக்கடை அருகே உள்ள பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கரியராமர். இவரது மனைவி மஞ்சுளா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    ஆனால் வழியிலேயே மஞ்சுளாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். இதை பார்த்த ஆம்புலன்சில் சென்ற அர்ஜுன் என்பவர் அவருக்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் மஞ்சுளாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

    தாயும், சேயும் நாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.  #tamilnews
    Next Story
    ×