search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணப்பாறையில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி
    X

    மணப்பாறையில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

    மணப்பாறையில் மின்சாரம் பாய்ந்து மாணவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் ஜார்ஜ் (வயது 14). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வீட்டின் அருகே ஜார்ஜ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, திடீரென மழை பெய்ததால் வீட்டுக்கு செல்ல மாடியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு ஏறினான். இந்நிலையில் அந்த கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

    இதனால் அந்தகம்பியை பிடித்த மாணவனையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் வீட்டிற்கு செல்லும் சர்வீஸ் வயர் பழுதான நிலையில் இருந்ததால் அதில் இருந்த மின்சாரம் இரும்பு தகரம் வழியாக கம்பிக்கு சென்றதில் தான் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×