search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாய்பாபாகாலனியில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
    X

    சாய்பாபாகாலனியில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

    சாய்பாபாகாலனியில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் அபினந்த். இவரது மனைவி விஷ்ணு பிரியா (வயது 25).

    இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது. அபினந்த் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக கடந்த 2-ந் தேதி ஊருக்கு வந்தார். நேற்று கணவன், மனைவி இருவரும் பொருட்கள் வாங்க சென்றனர். இரவில் விஷ்ணு பிரியா மட்டும் மொபட்டில் வீடு திரும்பினார். மாப்பிள்ளை எங்கே? என பெற்றோர் கேட்ட போது, அவர் நண்பரை பார்த்து விட்டு வருவதாக சென்றிருக்கிறார் என கூறி உள்ளார்.

    பின்னர் விஷ்ணு பிரியா மாடி அறைக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வராததால் பெற்றோர் மாடிக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு விஷ்ணு பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கயிற்றை இறக்கி விஷ்ணுபிரியாவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    Next Story
    ×