என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாய்பாபாகாலனியில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
கோவை:
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் அபினந்த். இவரது மனைவி விஷ்ணு பிரியா (வயது 25).
இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது. அபினந்த் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக கடந்த 2-ந் தேதி ஊருக்கு வந்தார். நேற்று கணவன், மனைவி இருவரும் பொருட்கள் வாங்க சென்றனர். இரவில் விஷ்ணு பிரியா மட்டும் மொபட்டில் வீடு திரும்பினார். மாப்பிள்ளை எங்கே? என பெற்றோர் கேட்ட போது, அவர் நண்பரை பார்த்து விட்டு வருவதாக சென்றிருக்கிறார் என கூறி உள்ளார்.
பின்னர் விஷ்ணு பிரியா மாடி அறைக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வராததால் பெற்றோர் மாடிக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு விஷ்ணு பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கயிற்றை இறக்கி விஷ்ணுபிரியாவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்