search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே நிழற்குடை மீது வேன் மோதி டிரைவர் படுகாயம்
    X

    ஒரத்தநாடு அருகே நிழற்குடை மீது வேன் மோதி டிரைவர் படுகாயம்

    ஒரத்தநாடு அருகே நிழற்குடை மீது வேன் மோதி டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    மன்னார்குடி ராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 40). இவர் கோழி ஏற்றி செல்லும் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஒரத்தநாட்டில் கோழி ஏற்றுவதற்காக மன்னார்குடியில் இருந்து புறப்பட்டார். அப்போது ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமம் கீழரோடு அருகே அவர் சென்று கொண்டிருந்த போது அவர் ஓட்டி சென்ற லோடு வேன் நிலை தடுமாறி அந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையின் மீது மோதியது.

    இதில் சசிகுமார் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் லோடு ஆட்டோவின் முன்பகுதியில் சேதமானது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து சசிகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×