search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறில் கல்லூரி மைதானத்தில் மாணவர் தீக்குளிப்பு
    X

    செய்யாறில் கல்லூரி மைதானத்தில் மாணவர் தீக்குளிப்பு

    செய்யாறு அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாணவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்யாறு:

    செய்யாறு டவுன் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் அஸ்வின்குமார் (20). பூந்தமல்லி அருகே உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சமீபத்தில் நடந்த தேர்வில் சரியாக எழுதவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை தற்கொலை செய்ய முயற்சி செய்தார். ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்து கொண்டு செய்யாறு அண்ணா கலைக்கல்லூரி மைதானத்துக்கு சென்றார். அங்கு வைத்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். மைதானத்தில் வாக்கிங் சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து திடுக்கிட்டனர். அஸ்வின்குமார் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    அவரை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    செய்யாறு டவுன் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×