search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனிதனாக வாழ்வோம் - ஒளிமிக்க வாழ்வைப் பெறுவோம்: மதுரை ஆதீனம் தீபாவளி வாழ்த்து
    X

    மனிதனாக வாழ்வோம் - ஒளிமிக்க வாழ்வைப் பெறுவோம்: மதுரை ஆதீனம் தீபாவளி வாழ்த்து

    மனிதனாக வாழ்வோம்; ஒளிமிக்க வாழ்வைப் பெறுவோம் என்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #MaduraiAadheenam #Diwali
    மதுரை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மனித வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறைதான் வரும். நிலையாமை என்ற இவ்வுலகில் அன்புடன், பண்புடன் வாழ வேண்டும்.

    மனித வாழ்க்கை ஒரு பெரிய மலையை போன்று, உயரமான, நிறைய படிக்கட்டுகளைக் கொண்டது. இப்படிப்பட்ட படிக்கட்டுகளை மிகவும் கஷ்டப்பட்டு, நிதானத்துடனும், பொறுமையுடனும் ஏறினால் அங்கே ஜோதியை- தீப ஒளியை காணலாம். ஒளிமயமான வாழ்வை பெற முடியும்.

    பதவி வரும்போது, பணம் வரும்போது நாம் இதற்கு முன்னால் எப்படி இருந்தோம்? என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தோம்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பணிவும், பண்பும் மலரும். எவருக்கும் தீங்கு செய்தல் கூடாது. நன்மையே செய்ய வேண்டும். நன்மை செய்ய இயலாவிட்டால் தீமை செய்யாமலாவது இருக்க வேண்டும். அது நன்மை செய்வதற்கு சமம்.

    எந்த துறையானாலும் அங்கே உழைப்புக்கும், தொண்டுக்கும், தியாகத்திற்கும் உரிய மரியாதையை, சிறப்பை வழங்கிட வேண்டும். அப்படி வழங்காவிட்டால் உழைப்பு, தியாகம், தொண்டு இந்த வாசல்கள் அடைக்கப்பெற்றுவிடும். இதுவே இயற்கை நியதி. தினசரி தியானம் செய்ய வேண்டும். இறை பிரார்த்தனை என்பது ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியமானது. மனிதனாக வாழ்வோம். ஒளிமிக்க வாழ்வை பெறுவோம்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #MaduraiAadheenam #Diwali
    Next Story
    ×