என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனிதனாக வாழ்வோம் - ஒளிமிக்க வாழ்வைப் பெறுவோம்: மதுரை ஆதீனம் தீபாவளி வாழ்த்து
Byமாலை மலர்5 Nov 2018 8:33 AM GMT (Updated: 5 Nov 2018 8:33 AM GMT)
மனிதனாக வாழ்வோம்; ஒளிமிக்க வாழ்வைப் பெறுவோம் என்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #MaduraiAadheenam #Diwali
மதுரை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மனித வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறைதான் வரும். நிலையாமை என்ற இவ்வுலகில் அன்புடன், பண்புடன் வாழ வேண்டும்.
மனித வாழ்க்கை ஒரு பெரிய மலையை போன்று, உயரமான, நிறைய படிக்கட்டுகளைக் கொண்டது. இப்படிப்பட்ட படிக்கட்டுகளை மிகவும் கஷ்டப்பட்டு, நிதானத்துடனும், பொறுமையுடனும் ஏறினால் அங்கே ஜோதியை- தீப ஒளியை காணலாம். ஒளிமயமான வாழ்வை பெற முடியும்.
பதவி வரும்போது, பணம் வரும்போது நாம் இதற்கு முன்னால் எப்படி இருந்தோம்? என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தோம்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பணிவும், பண்பும் மலரும். எவருக்கும் தீங்கு செய்தல் கூடாது. நன்மையே செய்ய வேண்டும். நன்மை செய்ய இயலாவிட்டால் தீமை செய்யாமலாவது இருக்க வேண்டும். அது நன்மை செய்வதற்கு சமம்.
எந்த துறையானாலும் அங்கே உழைப்புக்கும், தொண்டுக்கும், தியாகத்திற்கும் உரிய மரியாதையை, சிறப்பை வழங்கிட வேண்டும். அப்படி வழங்காவிட்டால் உழைப்பு, தியாகம், தொண்டு இந்த வாசல்கள் அடைக்கப்பெற்றுவிடும். இதுவே இயற்கை நியதி. தினசரி தியானம் செய்ய வேண்டும். இறை பிரார்த்தனை என்பது ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியமானது. மனிதனாக வாழ்வோம். ஒளிமிக்க வாழ்வை பெறுவோம்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #MaduraiAadheenam #Diwali
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மனித வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறைதான் வரும். நிலையாமை என்ற இவ்வுலகில் அன்புடன், பண்புடன் வாழ வேண்டும்.
மனித வாழ்க்கை ஒரு பெரிய மலையை போன்று, உயரமான, நிறைய படிக்கட்டுகளைக் கொண்டது. இப்படிப்பட்ட படிக்கட்டுகளை மிகவும் கஷ்டப்பட்டு, நிதானத்துடனும், பொறுமையுடனும் ஏறினால் அங்கே ஜோதியை- தீப ஒளியை காணலாம். ஒளிமயமான வாழ்வை பெற முடியும்.
பதவி வரும்போது, பணம் வரும்போது நாம் இதற்கு முன்னால் எப்படி இருந்தோம்? என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தோம்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பணிவும், பண்பும் மலரும். எவருக்கும் தீங்கு செய்தல் கூடாது. நன்மையே செய்ய வேண்டும். நன்மை செய்ய இயலாவிட்டால் தீமை செய்யாமலாவது இருக்க வேண்டும். அது நன்மை செய்வதற்கு சமம்.
எந்த துறையானாலும் அங்கே உழைப்புக்கும், தொண்டுக்கும், தியாகத்திற்கும் உரிய மரியாதையை, சிறப்பை வழங்கிட வேண்டும். அப்படி வழங்காவிட்டால் உழைப்பு, தியாகம், தொண்டு இந்த வாசல்கள் அடைக்கப்பெற்றுவிடும். இதுவே இயற்கை நியதி. தினசரி தியானம் செய்ய வேண்டும். இறை பிரார்த்தனை என்பது ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியமானது. மனிதனாக வாழ்வோம். ஒளிமிக்க வாழ்வை பெறுவோம்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #MaduraiAadheenam #Diwali
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X