என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
20 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாது - தங்கதமிழ்செல்வன் ஆவேசம்
திண்டுக்கல்:
நிலக்கோட்டையில் வருகிற 11-ந் தேதி அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
நிலக்கோட்டை தொகுதியில் மட்டுமின்றி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளார். அதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என அ.தி.மு.க.வினர் நினைத்து வருகின்றனர். 20 தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாது.
யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை வாங்கிக் கொண்டு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அ.ம.மு.க. வேட்பாளர்களை தொகுதி மக்கள் வெற்றி பெற செய்வார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடுவதில் தடை ஏற்படுத்தவோ, வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்வதற்கான முயற்சிகளையோ மேற்கொள்ள முடியாத வகையில் அனைத்து கட்ட முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TTVDhinakaran #ThangaTamilSelvan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்