என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகூர் அருகே சாராயம் கடத்திய 3 பேர் கைது - 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
Byமாலை மலர்4 Nov 2018 6:15 PM GMT (Updated: 4 Nov 2018 6:15 PM GMT)
நாகூர் அருகே சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
நாகூர்:
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று நாகூர் அருகே மேலவாஞ்சூர் முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் விசாரித்தபோது, அவர் திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது26) என்பதும், சாராய பாக்கெட்டுகளை சாக்கு மூட்டையில் கடத்தி செல்வதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 120 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப் பட்டது.
அதேபோல் பனங்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகை காமராஜ் நகரை சேர்ந்த ராஜேந்திரன் (49), காடம்பாடியை சேர்ந்த பாண்டியன் (32) ஆகியோர் என்பதும், 120 லிட்டர் சாராயத்தை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று நாகூர் அருகே மேலவாஞ்சூர் முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் விசாரித்தபோது, அவர் திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது26) என்பதும், சாராய பாக்கெட்டுகளை சாக்கு மூட்டையில் கடத்தி செல்வதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 120 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப் பட்டது.
அதேபோல் பனங்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகை காமராஜ் நகரை சேர்ந்த ராஜேந்திரன் (49), காடம்பாடியை சேர்ந்த பாண்டியன் (32) ஆகியோர் என்பதும், 120 லிட்டர் சாராயத்தை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X