search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
    X

    விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    விக்கிரமங்கலம் அருகே பூச்சி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
    விக்கிரமங்கலம்:

    விக்கிரமங்கலம் அருகே கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 40). விவசாயி. இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தனபால் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×