search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குடி அருகே கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவியால் பரபரப்பு
    X

    ஆலங்குடி அருகே கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவியால் பரபரப்பு

    ஆலங்குடி அருகே கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவியை மீட்ட போலீசார் பெற்றோருக்கும், மாணவிக்கும் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.
    ஆலங்குடி:

     தஞ்சை மாவட்டம், ஆவணத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் மகள் கவுதமி (வயது 18). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர், தன்னை மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடுவார்கள் என்றும் கூறியதாக அவரது தந்தைக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். 

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவரது பெற்றோர் ஆலங்குடி போலீசில் புகார் செய்தனர். டி.எஸ்.பி. அய்யனார் தலைமை யிலான போலீசார் விசாரணை நடத்தி, மர்மநபர்களிடம் இருந்து கவுதமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கவுதமி மீண்டும் அவரது பெற்றோருக்கு போன் செய்தார். அப்போது, தன்னை கடத்திச்சென்ற மர்ம நபர் கீரனூர் அருகே உள்ள களமாவூரில் இறக்கி விட்டு சென்று விட்டதாகவும், தன்னை வந்து கூட்டி செல்லுமாறும் கூறியுள்ளார். 

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று கவுதமியை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கவுதமிக்கு கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்ததும், மனநலத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இதனால் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடி ரூ.5 லட்சம் கேட்டதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கவுதமிக்கும், அவரது பெற்றோருக்கும் போலீசார் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×