என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம் அருகே லாரி - மோட்டார் சைக்கிள் மோதல் - 2 பேர் பலி
Byமாலை மலர்4 Nov 2018 4:09 PM GMT (Updated: 4 Nov 2018 4:09 PM GMT)
ஆலங்குளம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஆலங்குளம்:
திண்டுக்கல் அருகே உள்ள காரியாப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 34). இவருடைய நண்பர் சஞ்சீவ்குமார் (26). லாரி டிரைவர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தங்களது நண்பரை பார்க்க வந்தனர். பின்னர் அவர்கள் நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர்.
அங்கு அருவியில் 2 பேரும் மகிழ்ச்சியாக குளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரவிச்சந்திரன் ஓட்டினார்.
நள்ளிரவு 1 மணியளவில் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரவிச்சந்திரன், சஞ்சீவ்குமார் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அஷ்ரப் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள காரியாப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 34). இவருடைய நண்பர் சஞ்சீவ்குமார் (26). லாரி டிரைவர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தங்களது நண்பரை பார்க்க வந்தனர். பின்னர் அவர்கள் நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர்.
அங்கு அருவியில் 2 பேரும் மகிழ்ச்சியாக குளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரவிச்சந்திரன் ஓட்டினார்.
நள்ளிரவு 1 மணியளவில் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரவிச்சந்திரன், சஞ்சீவ்குமார் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அஷ்ரப் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X