search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் நிலையத்தில் ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு
    X

    போலீஸ் நிலையத்தில் ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டரை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் போலீசார் மீது புகார் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் 107 பட்டாசு பெட்டிகள், ஆண்களுக்கான பேண்ட், சர்ட் 38 ஜோடிகள், பெண்களுக்கான 6 சுடிதார்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

    விசாரணையில் இந்த பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையொட்டி இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோரையும், இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் பாலாஜி உள்பட 4 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், போலீஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது?, யாரிடமாவது வாங்கி வைத்தனரா? என்றும் பட்டாசு பெட்டிகள், புதிய துணி மணிகளை தீபாவளிக்காக முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாங்கி வைத்துள்ளனரா? என்று விசாரணை நடந்து வருகிறது. இது சம்பந்தமாக விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    Next Story
    ×