என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிங்காநல்லூரில் ஆட்டோவை வழிமறித்து தம்பதியை மிரட்டி நகை பறிப்பு
கோவை:
கோவை நீலிகோணம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கோபால். ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி. இவரது மனைவி சாந்தாமணி(51).
இவர்கள் இருவரும் திருக்கடையூர் சென்று விட்டு பஸ்சில் ஊர் திரும்பினர். நள்ளிரவு 12.30 மணிக்கு சிங்காநல்லூர் பஸ் நிலையம் வந்த அவர்கள் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றனர்.
ஆட்டோ நீலிகோணம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மறித்தனர்.
கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள் சாந்தாமணி அணிந்திருந்த தங்க செயின், கோபால் அணிந்திருந்த மோதிரம் என 6 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சாந்தாமணி சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களின் முன்புறம் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் வழிப்பறி கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்