என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் ஊழியர் பலி
Byமாலை மலர்3 Nov 2018 6:02 PM GMT (Updated: 3 Nov 2018 6:02 PM GMT)
நாகூர் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
நாகூர்:
நாகை மாவட்டம் திருமருகல் தேவங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சுப்பிரமணியன். இவர் காக்கழனி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியன் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகூரை அடுத்த ஒக்கூர் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருமருகல் தேவங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சுப்பிரமணியன். இவர் காக்கழனி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியன் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகூரை அடுத்த ஒக்கூர் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X