search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்- திருமாவளவன்
    X

    பா.ஜனதாவை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்- திருமாவளவன்

    படேலின் சிலை அமைத்து காந்தியின் புகழை மறைக்கும் பா.ஜனதாவை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #BJP
    திருச்சி:

    திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 10-ந்தேதி நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு தொடர்பாக மண்டல ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று காலை திருச்சி வந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    திருச்சியில் டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க அரைக்கூவல் விடுக்கும் மாநாடாக இந்த மாநாடு அமையும்.

    இதில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். அதே போன்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பங்கேற்கவும் அழைப்பு விடுத்துள்ளோம். திருச்சியில் நடைபெறும் இந்த மாநாடு ஜனநாயக சக்திகளை இணைப்பதில் திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநாடாக அமையும்.

    தேசத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது. பாரதிய ஜனதா ஆட்சி மீண்டும் வந்து விடக்கூடாது. இதற்கான முயற்சிகளில் அகில இந்திய அளவில் அனைத்து தோழமை கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தது வரவேற்கத்தக்கது.


    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளோம். 3-வது அணி அமைத்து, யாரும் மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பளிக்க கூடாது. தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.விற்கு ஆதரவு அளித்துள்ளது. மற்ற தோழமை கட்சிகளும் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடுகிறீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். நான் தி.மு.க. கூட்டணியில் அங்கு போட்டியிடுவேன் என்றேன். இதில் எந்த முரண்பாடும் இல்லை.

    ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த மத்திய பா.ஜனதா அரசு அதற்கு நேர்மாறாக ரூ.3 ஆயிரம் கோடியில் பட்டேலுக்கு சிலை அமைத்தது ஏழை மக்களை அவமதிக்கும் செயல். தற்போது அயோத்தியில் மீண்டும் 100 அடியில் ராமர் சிலை வைப்பதாக கூறி உள்ளார்கள்.

    படேலின் சிலை அமைத்து காந்தியின் புகழை மறைக்கும் பா.ஜனதாவை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaigalkatchi #Thirumavalavan
    Next Story
    ×