என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் மோதி 5 பெண்கள் நசுங்கினர்
Byமாலை மலர்3 Nov 2018 10:40 AM GMT (Updated: 3 Nov 2018 10:40 AM GMT)
வத்தலக்குண்டு அருகே இன்று அதிகாலை அரசு பஸ் மோதியதில் 5 பெண்கள் நசுங்கினர்.
திண்டுக்கல்:
வத்தலக்குண்டு அருகே அய்யம்பட்டியை சேர்ந்த பெண்கள் சிலர் செங்கட்டாம்பட்டிக்கு 100 நாள் வேலை பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கம்பம் நோக்கி வந்த அரசு பஸ் நடந்து சென்று தொழிலாளர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கிருஷ்ணவேணி (வயது 45), லட்சுமி (45), திருத்தணி (42), பொன்னுத்தாய் (60), விஜயா (9) ஆகிய 5 பேர் உடல் நசுங்கினர். இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கிருஷ்ணவேணியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X