search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
    X

    மதுரை அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

    மதுரை அருகே பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கருப்பாயூரணி பொன்னி நகரைச் சேர்ந்த கருப்பையா மனைவி சாந்தி (வயது 48). இவர் நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மதுரை- சிவகங்கை ரோட்டில் கருப்பாயூரணி மின்வாரிய அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாந்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    இது தெடர்பாக காந்தி கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப் பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×