என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தோவாளையில் குளத்தில் பிணமாக கிடந்த டீ வியாபாரி- போலீஸ் விசாரணை
Byமாலை மலர்2 Nov 2018 5:30 PM GMT (Updated: 2 Nov 2018 5:30 PM GMT)
தோவாளையில் குளத்தில் டீ வியாபாரி ஒருவர் இறந்து கிடந்தது சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
தோவாளை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேலன், (வயது 42). இவரது மனைவி அனிதா.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வடிவேலன் மோட்டார் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை வடிவேலன் வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார்.
ஆனால் வெகு நேரமாகியும் வடிவேலன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை வடிவேலன் தோவாளை பெரிய குளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் வடிவேலனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆரல்வாய்மொழி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர்.
குளத்தில் பிணமாக கிடந்த வடிவேலனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த வடிவேலனின் முகத்தில் சிறு காயங்கள் இருந்தது. மேலும் அவர் குளத்தில் வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வடிவேலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
தோவாளை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேலன், (வயது 42). இவரது மனைவி அனிதா.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வடிவேலன் மோட்டார் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை வடிவேலன் வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார்.
ஆனால் வெகு நேரமாகியும் வடிவேலன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை வடிவேலன் தோவாளை பெரிய குளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் வடிவேலனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆரல்வாய்மொழி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர்.
குளத்தில் பிணமாக கிடந்த வடிவேலனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த வடிவேலனின் முகத்தில் சிறு காயங்கள் இருந்தது. மேலும் அவர் குளத்தில் வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வடிவேலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X