என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொட்டியம் ஏழூர்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி
Byமாலை மலர்2 Nov 2018 1:20 PM GMT (Updated: 2 Nov 2018 1:20 PM GMT)
தொட்டியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவயது குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டியம்:
தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந் நிலையில் தொட்டியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவயது குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளையராஜா. எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரோஷிகா (வயது 1) என்ற பெண் குழந்தை உள்ளது.
ரோஷிகாவிற்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மர்மகாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையளிப்பதற்காக சென்றனர். அங்கு குழந்தை ரோஷிகாவின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில் குழந்தை ரோஷிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X