search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே கூட்டநெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
    X

    கோவை அருகே கூட்டநெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பு - 2 பேர் கைது

    கோவை அருகே கூட்டநெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    தீபாவளியையொட்டி கோவை நகர கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் மாரி முத்து தலைமையில் போலீசார் கார்த்தி, உமா ஆகியோர் அடங்கிய குழுவினர் காந்திபுரத்தில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சதீஷ்குமார்(28) என்ற வாலிபரிடம் இருந்து செல்போனை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை கள்ளபாளையத்தை சேர்ந்த கணேஷ்(60), கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(42) என்பது தெரிய வந்தது. இதில் கணேஷ் மீது 50-க்கும் மேற்பட்ட பிக்பாக்கெட் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×