search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழலில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி
    X

    புழலில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி

    புழலில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    செங்குன்றம்:

    புழலை அடுத்த லட்சுமி புரம் ராஜாஜி தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 7). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த சில நாட்களாக சரரணனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

    இந்த நிலையில் அவனுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமானது. இதையடுத்து கடந்த 30-ந் தேதி சரவணனை சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தான். அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து உள்ளது. #Swineflu #Dengue

    Next Story
    ×